புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2011






கைதான போது கணவர், மகனிடம் கண்ணீர் விட்டு அழுத கனிமொழி!

தி.மு.க. அரசியல் பாரம்பரியத்தில் வளர்ந்து தந்தையின் இலக்கிய புலமையையும் கற்று தேர்ந்து கொண்டவர் கனிமொழி. 

பொழுது விடிந்தது முதல் இரவில் துயில் கொள்ளும் நேரம் வரை கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் பேச்சுகள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, எழுதுவது என்று எத்தனையோ பணிகளுடன் எப்போதும் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டிருப்பார். 

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக அவரை தடுமாற வைத்தன. நேற்று கைது செய்யப்பட்டதும் அவரை நிலைகுலைய வைத்து விட்டது. மிகப்பெரிய வக்கீல், அரசியல் பின்புலம் ஆகியவற்றால் வழக்குகளை சந்திக்கலாம். 

ஜெயிலுக்கு போகாமல் இருக்க முன் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற துளியளவு நம்பிக்கையுடன் டெல்லி பிரம்மபுத்திரா இல்லத்தில் நேற்று காலையில் துயிலெழுந்தார். 

தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், சுகவனம், ஜெயதுரை, ஆதிசங்கர், ஹெலன்டேவிட்சன், ரித்தீஷ், கே.பி.ராமலிங்கம், செல்வகணபதி, வசந்தி ஸ்டான்லி, தங்கவேலு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, இவர்களை தவிர விசுவாசமிக்க கட்சி நிர்வாகிகள் பலரும் அவரது இல்லத்தில் குவிந்து இருந்தனர். 

கோர்ட்டு முடிவு எப்படி இருக்குமோ என்ற பதட்டத்தில் இருந்த கனிமொழிக்கு அனைவரும் தைரியம் கொடுத்தனர். காலை 10 மணிக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டுக்கு கனிமொழி சென்றார். தி.மு.க. எம்.பி.க்களும் கோர்ட்டிற்கு வந்து இருந்தனர். 

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, சரத்குமாரின் மனைவி ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். காலை 11 மணி, 12.30 மணி என்று தீர்ப்பு சொல்லும் நேரம் அடிக்கடி தள்ளிகொண்டே போனதால் திக்...திக் மனதோடு ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு மணித்துளியாக நகர்த்தி கொண்டிருந்தார்கள். 

பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி சைனி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தனது உத்தரவை படித்ததும் கனிமொழி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். கண்கள் கலங்கி கண்ணீர் பெருகியது.அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதை, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் ஆறுதல் படுத்தினார்கள். 

ஜெயிலுக்கு அழைத்து செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டதும் சென்னை மாநகராட்சி 95-வது வார்டு கவுன்சிலர் துரை கோர்ட்டு அறையிலேயே ஒ வென்று கதறி அழுது விட்டார். அதைப்பார்த்ததும் மற்றவர்கள் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. 

துயரத்தில் ஆழ்ந்து இருந்த கனிமொழி அதை அடக்கி கொண்டு துக்கம் தாளாமல் அழுத துரையை தேற்றினார். மாலை 3 மணியளவில் கனிமொழியை நீதிமன்ற வளாகத்தில் உள்ள “லாக்-அப்” அறைக்கு அழைத்து செல்வதற்காக சுற்றியிருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 

பெண் போலீசார் கனி மொழியை லாக்-அப் அறைக்கு அழைத்து சென்றனர். கையை தட்டினால் ஏவலுக்கு எத்தனையோ போலீசார் வந்து நிற்பதையும் பாதுகாப்பு அரணாக சுற்றி நிற்பதையும் சிறுவயது முதல் பார்த்து பழக்கப்பட்ட கனிமொழியின் கைகளை பிடித்து பெண் போலீசார் அழைத்து சென்றதை பார்த்து அவரால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. 

கலங்கியப் கண்களுடன் லாக்-அப்புக்கு நடந்தார். அவரை தொடர்ந்து கணவர் அரவிந்தனும் வந்தார். எத்தனையோ அரசியல் களங்களுக்கு மனைவியை அனுப்பி வைத்து மகிழும் அரவிந்தனும் மனைவி ஜெயிலுக்கு செல்வதை பார்த்து நொறுங்கி போனார். 

லாக்-அப் அறைக்குள் செல்வதற்கு முன்பு கனிமொழி கணவரை கட்டித் தழுவினார். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் கண்ணீர் விட்டனர். 

கனிமொழியின் தோளில் தட்டி அரவிந்தன் தேற்றினார். லாக்-அப் அறைக்குள் சென்றதும் அவரால் துயரத்தை அடக்க முடியவில்லை. பெருகிவந்த கண்ணீரை துடைத்தபடியே சிலநிமிடங்களை கழித்தார். 

அடுத்த 10 நிமிடத்தில் கணவர் அரவிந்தனை சந்திக்க வேண்டும் என்று கனிமொழி முறையிட்டார். அவரது செல்போன் நம்பரையும் போலீசாரிடம் கொடுத்தார். 

அவரது தவிப்பை புரிந்த போலீசார் உதவ முயன்றனர். ஆனால் நீதிபதியின் உத்தரவால் எல்லோரும் வெளியே சென்று விட்டனர். போலீசாரால் அரவிந்தனை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

தமிழக பத்திரிகையாளர்களும் அரவிந்தனை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களாலும் முடிய வில்லை. இறுதியில் தி.மு.க. பிரமுகர் பாலகுரு என்பவர் மூலம் அரவிந்தனை தொடர்பு கொண்டனர். 

அவர் உடனடியாக விரைந்து வந்தார். கனிமொழியுடன் லாக்-அப் அறையில் சுமார் 20 நிமிடங்கள் பேசி கொண்டிருந்தார். அப்போது மகன் ஆதித்யாவை பார்க்க ஆசைப்படுவதாக கூறினார். 

உடனே ஆதித்யாவை அழைத்து வந்தனர். மகன் ஆதித்யாவின் கைகளை பிடித்து வருடியபடி அவரிடம் சுமார் 15 நிமிடங்கள் பேசினார். 

தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு ஆதித்யாவை தைரியமாக இருக்கும்படி வாஞ்சையுடன் தடவிகொடுத்தார். 

மாலை 4.30 மணிக்கு போலீசார் ஒரு வேனில் ராசாவையும், சரத்குமாரையும் திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு பெண் போலீசார் மற்றொரு வேனில் கனிமொழியை திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். 

இது நான் எதிர்பார்த்தது தான் என்று கனிமொழி ஜெயிலுக்கு செல்வதற்கு முன்பு கூறினார். ஆனால் ஜெயிலுக்குள் நுழைந்ததும் அவரது முகமே மாறிவிட்டது. இறுகிய முகத்துடன் ஜெயிலுக்குள் சென்றா

காங்கிரஸ்- திமுக உறவில் முறிவா?

First Published : 21 May 2011 03:39:56 AM IST

Last Updated : 21 May 2011 05:27:14 AM IST
சென்னை, மே 20: காங்கிரஸ் கட்சியுடனான உறவு பற்றி பொதுக்குழு கூடித்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி தில்லியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கருணாநிதியின் சி.ஐ.டி.நகர் வீட்டில் திமுக நிர்வாகிகள் ஆலோசித்தனர். பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமை முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு உள்பட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி: கனிமொழியின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது நீதிமன்ற விவகாரமாகும். அதில் நான் ஒன்றும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை.
 தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு: இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பேன். அது என்ன முடிவு என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.
 காங்கிரஸýடன் திமுக உறவு: எல்லோருடனும் நல்ல உறவு இருக்கிறது. திமுக என்பது ஒரு ஜனநாயக இயக்கம். நான் மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். நானாக ஒரு முடிவும் எடுக்க முடியாது. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தைத் தேவைப்படும்போது கூட்டுவோம் என்றார் கருணாநிதி.
 உங்கள் மனம் என்ன பாடுபடும்? "கனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் உங்கள் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது?' என்று நிருபர் கேட்டார். "உங்களுக்கு ஒரு மகள் இருந்து - அவர் செய்யாத குற்றத்திற்காக - இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில்தான் என் மனம் இருக்கிறது' என்றார் கருணாநிதி.
 தில்லிக்கு போகவில்லை: இப்போதைக்கு தில்லிக்கு நான் போகவில்லை என்றும் கருணாநிதி கூறினார்.உணவு  உண்டு குடும்பத்தாரோடு
ரஜினி மகிழ்ச்சியாக இருக்கிறார்

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு,  கடந்த 13-ந்தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

/TD>
அங்கு தீவிர சிகிச்சை பிரிவுவில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில்,  ஜினியின் உடலநிலை  இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்று ராமச்சந்திரா மருத்துவவமனை  நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 உணவு உண்டு குடும்பத்தாரோடு ரஜினி மகிழ்ச்சியாக இருப்பதாவகவும்,   மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

                                                                                       நிர்வாணமாக    டிக்கிறார் ஐஸ்வர்யா ராய்!

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் புதிய படமொன்றில் நிர்வாணமாக நடிக்க உள்ளார். ஹீரோயின் என்ற பெயரில் பிரபல இயக்குநர் மதுர் பந்தர்கர் இயக்கும் படத்தில்தான் அம்மணியை முழுமையாக தரிசிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது.

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு வயது சற்று தெரிந்தாலும் அழகும், நளினமும் குறையவில்லை. இருந்தாலும் ஏஜ் பேக்டர் பயம் ஐஸ்வர்யாவை தொற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. கரீனா, கத்ரீனா, தீபிகா, பிரியங்கா, சோனம் கபூர், சோனாக்ஷி என நீண்டு செல்கிறது பாலிவுட்டின் சின்ன சிட்டுகளின் பட்டியல். இவர்களுடன் போட்டாப் போட்டி போட மாஜி உலக அழகி அந்தஸ்து மட்டும் போதாது, அதுவும் வயது ஏறிக் கொண்டே போகும் போது…! எனவே தான் தனது புதிய படத்தில் ஐஸ்வர்யா அதிரடியாக நிர்வாணமாக தோன்ற சம்மதித்திருப்பதாக பாலிவுட் வட்டாரம் சலசலக்கிறது.
முன்னதாக இந்தப் படத்திற்கு தேசிய விருது புகழ் இயக்குநர் மதுர் பந்தர்கர் கரீனா கபூரைத்தான் ஒப்பந்தம் செய்ய இருந்தார். ஆனால் நிர்வாண காட்சியா… அய்யய்யோ என்னால முடியாது… என கரீனா கபூர் ஓட்டம் பிடித்ததால், ஐஸ்வர்யாவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். முதலில் நிர்வாண காட்சியில் நடிக்க தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, கணவரின் சம்மதத்துடன் நடிக்க சம்மதித்துள்ளார்.
அப்படியென்ன கதை? அங்கேதான் விவகாரமே இருக்கிறது. ஹீரோயின் என்ற தலைப்பு கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க ஒரு நடிகை சினிமா உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எப்படி எல்லாம், யார் யாரையெல்லாம் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது என்பது பற்றிதான்.  ஏற்கனவே இதுபோன்ற கதையம்சங்களுடன் ஒருசில படங்கள் வெளியான போதிலும், அவற்றிலெல்லாம் இலைமறை காயாகத்தான் இதுபோன்ற அந்தரங்க காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் முதன் முதலாக இந்த படத்தில்தான் திரையுலகின் மறுமுகம் தெரியப் போகிறது என்பது கூடுதல் தகவல்.
கதைக்கு பொருத்தமாகத்தான் நிர்வாண காட்சிகள் இருக்கும்; எதையும் மிகைப்படுத்தி காட்ட மாட்டேன் என்று கூறியிருக்கும் டைரக்டர் மதுர் பந்தர்கருக்கு கண்டிப்பாக திரைத்துறையில் இருந்தே எதிர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் எதிர்த்தால் என்ன… ரசிகர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பார்களே… கலையுலகின் அழகுச்சிலையை நிர்வாணமாக காட்டுவதற்கு!!

கருத்துகள் இல்லை:

ad

ad