அமைச்சர்களுடன் சோனியா சந்திப்பு: ப. சிதம்பரம் இலாகா மாறுகிறது?
புதுதில்லி, ஜூன் 28- மத்திய அமைச்சரவை ஒரிரு நாட்களில் மாற்றி அமைக்கப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வருகிறார்.
இன்று முதல், மத்திய அமைச்சர்களை அவர் தனித்தனியே அழைத்து நேரடியாக பேசி வருகிறார்.
இந்த முறை மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில அமைச்சர்களை கட்சிப் பணிக்கு அனுப்ப சோனியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் விருப்பத்தின் பேரில், முக்கிய இலாகாக்கள் அனைத்தும் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சராக உள்ள ப. சிதம்பரம் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் இலாகா மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஜோதிராதிய சிந்தியா கேபினட் அமைச்சராக பதவி உயர்த்தப்படுகிறார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ராஜ் பாப்பர் உள்ளிட்ட சிலர் அமைச்சராக சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
எம்.எஸ். கில், முரளி தியோரா, கான்டி லால் புரியா, பி.கே. ஹண்டிக் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று முதல், மத்திய அமைச்சர்களை அவர் தனித்தனியே அழைத்து நேரடியாக பேசி வருகிறார்.
இந்த முறை மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில அமைச்சர்களை கட்சிப் பணிக்கு அனுப்ப சோனியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் விருப்பத்தின் பேரில், முக்கிய இலாகாக்கள் அனைத்தும் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சராக உள்ள ப. சிதம்பரம் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் இலாகா மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஜோதிராதிய சிந்தியா கேபினட் அமைச்சராக பதவி உயர்த்தப்படுகிறார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ராஜ் பாப்பர் உள்ளிட்ட சிலர் அமைச்சராக சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
எம்.எஸ். கில், முரளி தியோரா, கான்டி லால் புரியா, பி.கே. ஹண்டிக் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக