புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2012


நம்பி வந்தவளை கைவிட்டு விடாதீர்கள்: நடிகர் விஜய்

வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 11 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசைகளுடன் திருமணம் செய்து வைக்கும் விழா வேலூரில் நடந்தது. 

நடிகர் விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் மாலைகள் எடுத்துக் கொடுக்க மணமக்கள் அதை மாற்றிக் கொண்டனர். ஒவ்வொரு மணமகனிடமும்  விஜய் தம்பதியினர் தாலியை எடுத்து தந்தனர். கெட்டிமேளம் மற்றும் ரசிகர்களின் விசில் சத்தங்களிடையே மணமகன்கள் அனைவரும் தங்கள் இணைகளுக்கு தாலி கட்டினர். 

அதன்பின் நடிகர் விஜய் பேசியதாவது:

இங்கு திருமணம் செய்து அமர்ந்துள்ள மணமக்களை வாழ்த்துவதற்கு எனக்கு வயது இல்லை. ஆனாலும், வாழ்க்கையை ஆனந்தமாக கழியுங்கள். மணமக்களுக்குள் சிறு, சிறு ஊடல்கள் வரலாம், அதையெல்லாம் கடந்து புரிந்து கொண்டு வாழுங்கள். எந்த காரணத்துக்காகவும் நம்பி வந்தவளை கைவிட்டு விடாதீர்கள்.

எனக்கு எனது பிள்ளைகளிடம் நேரத்தை செலவிட முடிவதில்லை. அதை எனது மனைவி பார்த்துக் கொள்கிறாள். மனைவிதான் எனது பலமே.

அப்போது துப்பாக்கி படம் குறித்து கேட்டு ரசிகர்கள் கூச்சல் போட்டனர். துப்பாக்கியில் 5 புல்லட்கள் ஏற்றியாகிவிட்டது. 6வது புல்லட் மற்றுமே ஏற்ற வேண்டியது உள்ளது. அது லோடு ஆனதும் துப்பாக்கியை உங்களுக்கு வழங்கி விடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

ad

ad