புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2012


யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை! கலைஞர் அறிக்கை!
திமுக தலைவர் கலைஞர் (23.08.2012) வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேள்வி: மீனவர் தாக்குதலை கண்டிக்கும் திமுக மத்திய ஆட்சியில் தொடர்வது ஏன் என்று மாநிலங்களவை உறுப்பினரான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த டி. ராஜா கேட்டிருக்கிறாரே?
பதில்: "இந்த கேள்விக்கு தி.மு.க. பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். “யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை” என்று கிராமத்தில் சொல்வார்கள். கூட்டணியைப் பற்றியும், தோழமையைப் பற்றியும் ராஜா பேசலாமா? தமிழகத்திலே ஆளுங்கட்சியைப் பற்றி அவருடைய கட்சியும், தோழர் நல்லகண்ணுவும் அன்றாடம் குறை சொல்லுகிறார்கள். ஆனால் ஜெயலலிதா கொடுத்த இஃப்தார் விருந்துக்கு முதல் நபராக தா. பாண்டியன்தான் செல்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா குறைந்தபட்ச நாகரிகத்தையாவது காட்டி; தா.பாண்டியனை விளித்தார்களா என்றால் இல்லை. 

ஆனாலும் அடுத்த நாள் முதலமைச்சரைப் பார்க்க தலைமைச் செயலகத்தில் போய் தா.பாண்டியன் காத்திருக்கிறார். ராஜா முதலில் தனது ஆலோசனையை தா. பாண்டியனுக்குச் சொல்லட்டும். தி.மு.க. மத்திய ஆட்சியில் தொடர்வதா இல்லையா என்பதைப் பற்றி இந்த ராஜாவின் யோசனையை நாங்கள் யாரும் கேட்கவில்லை. கேட்கும்போது அவர் இந்த உபதேசத்தைச் செய்யலாம். உலகில் மலிவான ஒன்று உபதேசம்தானே?. இவ்வாறு கூறியுள்ளார்.

ad

ad