யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை! கலைஞர் அறிக்கை!
திமுக தலைவர் கலைஞர் (23.08.2012) வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.கேள்வி: மீனவர் தாக்குதலை கண்டிக்கும் திமுக மத்திய ஆட்சியில் தொடர்வது ஏன் என்று மாநிலங்களவை உறுப்பினரான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த டி. ராஜா கேட்டிருக்கிறாரே?
ஆனாலும் அடுத்த நாள் முதலமைச்சரைப் பார்க்க தலைமைச் செயலகத்தில் போய் தா.பாண்டியன் காத்திருக்கிறார். ராஜா முதலில் தனது ஆலோசனையை தா. பாண்டியனுக்குச் சொல்லட்டும். தி.மு.க. மத்திய ஆட்சியில் தொடர்வதா இல்லையா என்பதைப் பற்றி இந்த ராஜாவின் யோசனையை நாங்கள் யாரும் கேட்கவில்லை. கேட்கும்போது அவர் இந்த உபதேசத்தைச் செய்யலாம். உலகில் மலிவான ஒன்று உபதேசம்தானே?. இவ்வாறு கூறியுள்ளார்.