புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2012


தீர்வு விடயத்தில் சர்வதேசம் கரிசனை! தமிழ் மக்கள் நம்பிக்கையோடு இருக்கவேண்டும்! யசூசி அகாசி
சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் மிகவும் கரிசனையோடு இருக்கின்றது. காலதாமதம் ஏற்படாமல் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு சர்வதேச நாடுகள் கூடிய கவனம் எடுக்கும். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் நம்பிக்கையோடு இருக்கவேண்டும் என்று யசூசி அகாஷி தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான மக்கள் குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜப்பானைப் பொறுத்தவரையில் அங்கே ஜப்பானியர்கள் மட்டும் வாழ்கின்ற ஒரு நாடு. அங்கே எல்லாம் ஒரே மாதிரியானதாக இருக்கும்.
இலங்கை பல இனங்கள், பல்வேறுபட்ட கலாசாரத்தைப் பின்பற்றுகின்ற ஒரு நாடாக இருக்கின்றது.
அதனால் அது பலமானதாகவும் வாழ்கையை துடிப்பாக்கக் கூடிய நாடாகவும் இருக்கிறது. இதனை அனைவரும் சரியாக பயன்படுத்தி ஐக்கிய இலங்கையை தோற்றுவிக்க உழைக்கவேண்டும்.
தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்திடம் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாவிட்டாலும் சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் மிகவும் கரிசனையோடு இருக்கின்றது.
காலதாமதம் ஏற்படாமல் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு சர்வதேச நாடுகள் கூடிய கவனம் எடுக்கும். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்காது நம்பிக்கையோடு இருக்கவேண்டும்.
2009ம் ஆண்டுக்கு முன்னர் யுத்தம் நடைபெற்ற காலத்தில் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டது.
தற்போது அந்த நிலைமைமாறி சுமூகமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஏ9 வீதி திறக்கப்பட்டு எங்கும் எல்லோரும் சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக நாளை சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்திக்கும்போது அவரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அகாஷி மேலும் தெரிவித்தார்.

ad

ad