புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2012


எனது மதத்தின் குருமாரும் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றார்கள்: பா.உ சுமந்திரன் குற்றச்சாட்டு
நான் ஒரு கிறிஸ்தவன். ஆனால் மிகவும் வெட்கத்துடன் நான் கூற முன்வருவது என்னவென்றால், எனது மதம் சார்ந்த குருமாரும் சிறுவர் துஸ்பிரயோகங்களிலும் பாலியல் வல்லுறவுகளிலும் ஈடுபடுகின்றார்கள் என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலும் விதவைப் பெண்கள் வலுக்கட்டாயமாக விபசாரத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள். இதற்கு பொலிசாரும் இராணுவத்தினரும் உடந்தையாக செயற்படுகின்றார்கள்.
சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவுகள் போன்றவை இலங்கையில் அதிகரித்திருப்பது மிகுந்த கவலையளிக்கின்றது.
உறவினர்களாலும், தந்தையர்களாலுமே மேற்படி குற்றச் செயல்கள் செய்யப்படுகின்றன. அத்துடன் இராணுவத்தினர், அரசியல் பிரமுகர்கள், செல்வந்தர்கள் ஆகியோரும் மேற்படி குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக மதத் தலைவர்களாலும் இவ்வாறான குற்றச் செயல்கள் செய்யப்படுகின்றன. மதத் தலைவர்கள் என்னும்போது நான் யார் மீதும் எனது விரலை நீட்ட விரும்பவில்லை.
எனினும் எனது மதத்தின் குருமாரும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றமை எனக்கு கவலையளிக்கின்றது. அரசாங்கம் இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களை தண்டிப்பதோடு, குற்றச்செயல்களையும் தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ad

ad