புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2012


டெசோ மாநாட்டை தொடரும் சோதனைகள்! புலிகள் பங்கேற்கக்கூடும் என்று கூறுவது உண்மைக்கு மாறானது! கருணாநிதி
திமுக நாளை சென்னை நடத்தவிருக்கும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோவின் மாநாடு பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து எதிர்நோக்குகிறது. இலங்கையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிவரும் ஈழத்தமிழர்களுடைய வாழ்வுரிமையை பாதுகாப்பதே இம்மாநாட்டின்
நோக்கம் என்று கருணாநிதி தெரிவித்திருந்தார்.
நேற்று டெசோ மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்படவேண்டும் என்ற பொதுநல வழக்கின் மீது உத்திரவு எதுவும் பிறப்பிக்காமல் சென்னை உயர்நீதிமன்றம், மாநாடு நடத்த அனுமதி கோரும் டெசோ மனுவின் மீது முடிவெடுக்கும் பொறுப்பினை மாநகர காவல்துறையிடமே விட்டுவிட்டது.
இரவு மாநாடு நடத்த அனுமதி இல்லை என்ற செய்தி டெசோ அமைப்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து திமுக மீண்டும் உயர்நீதி மன்றத்தை அணுகியது.
இன்று மதியம் அந்த வழக்கு நீதிபதி பால் வசந்தகுமார் முன் விசாரணைக்கு வந்தது.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினையோ போக்குவரத்து நெரிசலோ ஏற்படும் வாய்ப்பில்லை என திமுக தரப்பில் வாதாடப்பட்டது.
ஆனால் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தீவிரவாதிகள் ஊடுருவி, அயோத்தியில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்ததைப் போன்று பெரும் களேபரம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எனவே மாநாடு நடத்தப்படக்கூடாது எனவும் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வசந்தகுமார் ஏற்கனவே மாநாடு தொடர்பான பொதுநலவழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளே இவ்வழக்கையும் விசாரிக்கட்டும் என்று சொல்லி அமர்வை முடித்துக்கொண்டார்.
மாநாடு நடத்த அனுமதி கோரும் மனு பொதுநல வழக்கை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்சால் இன்றே விசாரிக்கப்படுமா அல்லது தலைமை நீதிபதி புதிய பெஞ்ச் அமைப்பாரா என்பது தெரியவில்லை. 
இதேவேளை, இராயப்பேட்டை வை.எம்.சி.ஏ அரங்கில் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாகத் தொடர்கின்றன.
காலையில் திமுக தலைவர் கருணாநிதி மாநாட்டை நடத்துவதற்கு சட்டப்படி உள்ள வழிமுறைகளை எல்லாம் கடைப்பிடிக்க இறுதிவரை முயற்சி செய்வோம் எனக்கூறி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
திமுக வேண்டுகோளின்படி இந்திய அரசு ஆதரித்து, ஐக்கிய நாடுகள் மன்றம் ஜெனீவாவில் நிறைவேற்றிய தீர்மானத்தை மேலும் வலியுறுத்துவதுதான் இந்த மாநாட்டின் உண்மையான நோக்கம்.
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மட்டுமே இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று வெளிப்படையாக அறிவித்திருந்தும், மாநாட்டினை எப்படியும் நடக்கவிடாமல் தடுக்க சில முயற்சிகள் நடைபெறுகிறது.
விடுதலைப்புலிகளும் வேறுசில தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளக்கூடும் என்று தகவல் வந்திருப்பதாக காவல்துறை ஆணையர் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது.
இலங்கையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிவரும் ஈழத்தமிழர்களுடைய வாழ்வுரிமையை பாதுகாப்பதே திமுகவின் நோக்கம் என்றும் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
டெசோ மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் அண்ணா அறிவாலயத்தில் உரையாற்றுவார்கள்: கலைஞர்
சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இன்று இரவு 7.40 மணிக்கு திமுக தலைவர் கலைஞர்  டெசோ மாநாட்டுக்கு தடை நீடித்தால் நாளை அண்ணா அறிவாலயத்தில் இந்த மாநாடு நடைபெறும் என்றும் காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி  சென்னை அக்கார்டு ஓட்டலில் ஆய்வரங்கம் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.
டெசோ மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் அண்ணா அறிவாலயத்தில் உரையாற்றுவார்கள்.   டெசோ மாநாட்டு தீர்மானங்களை விளக்கி  ஆகஸ்ட் 20 முதல் 30ம் தேதி வரை பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும், தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
 

ad

ad