புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2012


த.தே. கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடிக்க முடியுமா? முடிந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயார்- பூ.பிரசாந்தன் சவால்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? முதலமைச்சராக முடியுமா? முடிந்தால் கூறட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒதுங்கி மக்களுக்காக தியாகம் செய்யத் தயாராக உள்ளதாக கிழக்கு மாகாண சபை வேட்பாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
தமக்கென்று எந்தவிதமான கொள்கையோ, தூரநோக்கோ இல்லாது, விடுதலைப் புலிகள் இருக்கும் வரை தமிழீழம், வடகிழக்கு இணைப்பு, சர்வதேசத்திற்குக் காட்டுவதற்கு வாக்களியுங்கள் என்கின்றனரே சர்வதேசத்திற்கு 62 வருடங்களாக காட்டிக் காட்டி என்ன நடந்தது?
இலங்கையில் அதி உச்சமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக 22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பாராளுமன்றத்திற்கு அனுப்பிக் காட்டினோம். சர்வதேசம் என்ன செய்தது? அதிகூடிய போர் தளங்கள் மூலம் சர்வதேசமே உற்றுப்பார்த்த ஆயுதக் குழுவை வைத்திருந்த போது சர்வதேசம் பார்க்கவில்லை.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்குமா? இல்லை என்பது வெளிப்படை. இப்படியிருக்கையில், தமிழரிடம் இருக்கும் முதலமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு எடுத்துக்கொடுக்கவா அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கு எடுத்துக் கொடுக்கவா பார்ப்பது எப்படி சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார்.
மண்முனை தாழங்குடாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ad

ad