புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2012


காரைதீவு வீடொன்றில் பகவான் சத்திய சாயிபாவாவின் படத்திலிருந்து விபூதி கொட்டுகின்றது.(படங்கள் இணைப்பு)
காரைதீவிலுள்ள வீடொன்றில் பகவான் சத்திய சாயிபாவாவின் படத்திலிருந்து விபூதி கொட்டோகொட்டென்று கொட்டுகின்றது.

காரைதீவு 7 ம் குறிச்சியிலுள்ள குணசேகரம் சாந்தி என்பவரின் வீட்டிலுள்ள சாமியறையில் சாயி படம் மற்றும் அருகிலுள்ள ஏனைய சுவாமி படங்களிலிருந்ததே இவ்வற்புதம் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்த அதிசயமானது  கடந்த கதிர்காமக் கந்தன்  கொடியேற்ற தினமான யூலை 18ம் திகதியிலிருந்து விபூதி வர ஆரம்பித்து, தற்போது ஒரு மாதம் கடந்தும் கொட்டிக்கொண்டேயிருக்கிறது.
மேலும் அவர்களுக்கு கனவில் பிரசன்னமாகி தனக்கு உணவு பரிமாறுமாறு பகவான் கேட்டுக்கொண்டதற்கு இமைவாக  தினமும் உணவும் பாலும் சாயிபாபா படத்தின் முன்னால் நிவேதனமாக படைக்கப்படுகிறது.
இவ்வாறு நிவேதனம் வைத்து அரைமணி நேரத்தினுள் அரைவாசி பகுதி முடிந்துவிடும். அவ்வாறான அற்புதமும் நடக்கிறது.
இவ்வதிசயத்தை கண்டு தரிசிப்பதற்காக தினமும் பெருமளவான மக்கள் படையெடுக்கின்றனர்.

ad

ad