புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2012


அமைதியான போராட்டத்தால் பயனில்லாததால்விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஏந்தினார்கள் : ராம்விலாஸ் பஸ்வான் பேச்சு 
இலங்கை தமிழர் பிரச்சினை தீரவேண்டுமானால் தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று சென்னையில் நடந்த `டெசோ' மாநாட்டில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.



சென்னையில் நேற்று நடந்த `டெசோ' மாநாட்டில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பேசியபோது,   ‘’இலங்கையில் தமிழ் ஈழம் என்ற தனி நாடு கேட்டு நடக்கும் போராட்டத்துக்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்களே என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழ் மக்கள்தான். அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால், அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

எந்த தமிழரும் அங்கு அந்நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வரமுடிவில்லை. இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்று ஐ.நா. அறிக்கையே கூறியது.
இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை அது தமிழ்நாட்டுக்குள்தான் தெரிகிறதே தவிர, தமிழகத்தை தாண்டி இந்தியாவின் இதர மாநில மக்களுக்கு முழுமையாக தெரியவில்லை. எல்லோரும் இலங்கை தமிழர் என்றாலே அவர்கள் விடுதலைப்புலிகள், அவர்கள் பயங்கரவாதிகள் என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அமைதியான வழியில் போராடி அதனால் பயன் கிடைக்காமல் போகவே, விடுதலைப்புலிகள் கையில் ஆயுதங்களை எடுக்கவேண்டி இருந்தது என்ற உண்மை தமிழகத்தை தவிர மற்ற மாநில மக்களுக்கு தெரியவதில்லை.

இதுபோன்ற மாநாடுகளை வட மாநிலங்களில் நடத்தவேண்டும். அப்போதுதான் அங்குள்ள மக்க ளுக்கு இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி தெரியவரும். இந்த நேரத்திலே மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இலங்கை தமிழர்கள் தங்கள் உரிமைகளை பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினை தீர தனி ஈழம்தான் ஒரே தீர்வு’’ கூறினார்.
கருத்துக்கள்(4)

ad

ad