புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2012


மட்டு. கதிரவெளியில் இரா.சம்பந்தன் கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம்
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரம், மட்டக்களப்பு, கதிரவெளி பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் பரசுராமன் சிவநேசன் தலைமையில் இன்று நடைபெற்றது.
வெருகல்பதி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் பூசைகளின் தமிழரசுக் கட்சியின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா ஆகியோர், கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பூசைகளில் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர், உயிர் நீத்தவர்களுக்காக ஒரு நிமிட இறைவணக்கத்துடன் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபைக்கான கல்குடா தொகுதி வேட்பாளர்களான கி.துரைராசசிங்கம், கி.சேயோன், ப.சிவநேசன் மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பாளர் ச.விஜயகாந்த் ஆகியோர் இங்கு உரையாற்றினர்.

ad

ad