புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2012


ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு: கலைஞர், ஸ்டாலின், விஜயகாந்த், ராமதாஸ் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
முதல்வர் ஜெயலலிதா கொடநாடு சென்று தங்கியது குறித்து விமர்சனம் செய்தார்கள் என்றும்,  முதல்வரின் புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் விமர்சனம் செய்ததாக,
தி.மு.க தலைவர் கலைஞர், தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு நீதிபதி பொன் கலையரசன் முன்னிலை யில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து கலைஞர் அக்டோபர் 10-ம் தேதியும், ராமதாஸ் அக்டோபர் 9-ம் தேதியும், விஜயகாந்த் அக்டோபர் 15-ம் தேதியும் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இவர்களது பேச்சை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் களுக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.  




ad

ad