புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2012



துவரை இல்லாத அளவிற்கு, தற்போது தமிழக அமைச்சர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் பலர் மீது பாலியல் ரீதியிலான சர்ச்சைகள் பரவலாக எழுந்துகொண்டிருக்கிறது.

சமீபத்தில் பதவி நீக்கப்பட்ட சீனியர் அமைச்சர் மீதும் இது போன்ற சர்ச்சைகள் எழுந்து அது கார்டன்வரை போனது. அதேபோல் சபையின் உச்சமானவரும் கூட இதுபோன்ற கிளுகிளு விவகாரங்களில் சிக்கி, அங்கங்கே கிசுகிசுவாக பரவிக்கொண்டிருக்கிறார். முதல்வருக்கு அடுத்த நிலையில் இருக்கும் இன்னொரு சீனியர் அமைச்சரின் திருமணமான மகன், ஒரு சின்னத்திரை நடிகையின் வீடே கதி என்று கும்மாளம் போட்டுக் கிடக்கிறார். அந்த சின்னத் திரை நடிகையோ, மந்திரி மகன் தன் முந்தானையில் என்ற கித்தாப்பில் அமைச்சரின் துறையில் அதிகமாகவே மூக்கு நுழைத்துவருகிறார்.

டிரான்ஸ்பர், போஸ்டிங், புரமோசன், காண்ட்ராக்ட் என அந்த சின்னத்திரை நடிகை, பலவற்றிலும் புகுந்து விளையாடுவதால் அவரைச்சுற்றி ஒரு மீடியேட்டர் டீம் உருவாகிவிட்டது. இதேபோல் மேலும் மூன்று அமைச்சர்கள் பெரிய திரை, சின்னத் திரை என நடிகைகளின் மடியே கதி என்று மயங்கிக் கிறங்கிக் கிடக்கிறார்கள். இப்படிப்பட்டவர் களின் செட்டப்புகள் ஆட்சி நிர்வாகத்தில் தலையிடத் தொடங்கிவிட்டதால், இவற்றை வெறும் அந்தரங்க விவகாரம் என்று நாம் எளிதாக ஒதுக்கிவிட முடியாது. அமைச்சர்கள் தரப்பின் பலவீனம், நிர்வாகத்தையும் பலவீனப்படுத்தி வருவதுதான் கவலைக்குரியது.

இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியனின் இரண்டாவது மகன் செபாஸ்டின் தொடர்பான பலான சி.டி. நான்கைந்து நாட்களாய் தூத்துக்குடி மாவட்டம் முழுக்கப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. செல்போன் கடைக்காரர்கள் இந்தக் காட்சியை.....

ad

ad