புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2012


கோத்தபாய ராஜபக்ஸ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மட்டக்களப்புக்கு விஜயம்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயர் மட்டக் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.
மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில், மாநகரின் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான உயர் மட்டக் கூட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையினால் நகர அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம் ஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி. எஸ். எம். சார்ள்ஸ், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீர்த்தா பிரபாகரன், மாநகர சபையின் பிரதி மேயர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், மட்டக்களப்பிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு செயலாளரின் வருகையை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad