புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2012

கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாதது கூட்டமைப்பு விட்ட தவறு: சட்டத்தரணி ஸ்ரீகாந்தா
 
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாதது ஒரு விபத்து என்று கூறமுடியாது. அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறு என என யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு தேற்றாத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை வேட்பாளர் கோவிந்தன் கரணாகரம் (ஜனா) என்பவரை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு மேலம் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கு பிரதேசம் 88000 சதுரமைல் பிரதேசத்தினைக் கொண்டுள்ளது. இது எமது தாயக பூமி. ஆனால் தற்போது திருகோணமலையிலும் அம்பாறை மாவட்டத்திலும் பெரும்பான்மை இனத்தவர்கள் எமதுதாயக பூமியைச் சூறையாடி வருகின்றார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் அவர்களுக்குத் தெரியாமலேயே வடக்கு கிழக்கு இணைப்புக்கு அத்திவாரமிட்டுள்ளார்கள்.
இதனை நாம் சாதகமாகப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து வீதிகளையும் வெளிநாட்டின் உதவிகளுடன் புனரமைப்புச் செய்துள்ளார்கள். இது எம்மினத்திற்கும் வடகிழக்கு இணைப்புக்கு இவை பெரும் சாதகமாக அமைந்துள்ளது.
எம்மினத்தவர்கள் கிட்டத்தட்ட 12 லட்சம் போர் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். நமக்கு வடகிழக்கில் வேண்டிய நிலங்கள் உண்டு. வெளிநாட்டில் உள்ளவர்கள் மீண்டும் இங்கு வரும் வாய்ப்புக்கள் உள்ளன.
இவற்றுக்கு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் உந்து சக்தியாக அமைய வேண்டும்.
வடக்கு கிழக்கினைப் பொறுத்தமட்டில், வடக்கினைவிட கிழக்கு மாகாணம் மிகமோசமாகப் பாதிக்கப் பட்டதாகும். இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண ஆட்சியைக் கைப்பற்றும் அதற்கு கிழக்கு மாகாண மக்கள் தங்களது வாக்குச் சீட்டை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்.

ad

ad