புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2012


விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டார்கள் என்பது தவறான கருத்து!- அரியநேத்திரன் பயங்கரமான புலி: ஹிஸ்புல்லா உறுமல்
தமிழீழ விடுதலைப் புலிகள் எல்லாம் அழிந்துவிட்டார்கள் என்பது தவறான கருத்து தமிழ் கூட்டமைப்பிற்குள் இருக்கும் “அரியம்” என்கின்ற அரியநேத்திரன் பயங்கரமான புலி என கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை காத்தான்குடி குட்வின் சந்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது இனத்தை கடந்த 30 வருடங்களாக அழித்த பிரபாகரனும் அவனது புலிப்படையும் முற்றாக அழிந்து விட்டதென நாம் நினைக்கின்றோம். ஆனால் அது தவறான கருத்து.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான அரியநேத்திரன் ஒரு சிறந்த பேச்சாளர் எதையும் துணிச்சலாக முன் வந்து பேசுபவர்.
தமிழ் மக்களை அவர் நன்றாக வழிநடாத்தி வருகின்றார். ஆனால் இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் விட மகவும் கொடிய ஒரு புலிப் பயங்கரவாதி என்பது யாருக்கும் தெரியாது.
எனவே எமது இனத்தை அழித்த புலிப் பயங்கரவாதிகள் எல்லாம் அழிந்துவிட்டார்கள் என நாம் நினைப்பது மிகவும் தவறான கருத்தாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அது புலிகள் வெற்றி பெற்றதற்கு சமனாகும். இதனால் சகல மக்களும் வெற்றிலைக்கு வாக்களித்து புலித் தலைவன் பிரபாகரனையும் அவனது புலிப்படையையும் கொன்று எமது இனத்தை காப்பாற்றியதற்கு இந்த அரசுக்கு நன்றிக்கடன் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

ad

ad