புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2012

இன்று பன்னிரண்டாவது நாளாக உண்ணாநிலைப் போராடத்தில் ஈடுபட்டுவரும் திரு. கோபி சிவந்தன் அவர்களுக்கு ஆதரவினை வழங்குவதற்காக, அவர் அமரந்திருக்கும் ஸ்ரற்போர்ட் தொடருந்து நிலையம் அருகில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர்.

சைவ, கத்தோலிக்க மதகுருமார்களும் திரு. சிவந்தனை சந்தித்து அவருக்கு ஆசிவழங்கினர்.

திரு.சிவந்தனின் கோரிக்கைகளடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரற்போர்ட் பிரதான தொடருந்து நிலையப் பகுதியில் பரவலாக விநியோகிகப்பட்டதுடன், அவற்றை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டவர்களுக்கு அது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

சோர்வடைந்துள்ள நிலையில் காணப்படும் திரு. சிவந்தனின் இரத்த அழுத்தம் வீழ்ச்சியடைந்து காணப்படுவதாக, அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர் திருமதி. சசிகலா இராஜமனோகரன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அதிகரித்த மக்கள் ஆதரவு அவரை தொடர்ந்து உறுதியுடன் போராடுவதற்கான மனோபலத்தை கொடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது,


ad

ad