புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2012


இலங்கை கடற்படையின் அட்டூழியம்! தமிழக மீனவர்கள் 28 பேர் கைது! எச்சரித்து விடுதலை
தமிழக மீனவர்கள் 28 பேர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். கச்சதீவு அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இவர்களை சுற்றிவளைத்து படகுகளுடன் கைது செய்து, கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது.
அடுத்தடுத்து தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை பிடித்துச் செல்வதும், தமிழக தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பதும், இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும், இலங்கை அரசை கண்டிக்கிறோம் என்றும் மத்திய அரசு தரப்பில் வாக்குறுதி அளிப்பதும் தொடர் கதையாகவே நிகழ்ந்து வருகிறது.
ஊழல் புகார் உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சினையானாலும் மௌனமாக இருப்பதே சிறந்தது என்று வெளிப்படையாகவே கூறும் பிரதமர் மன்மோகன் சிங், இது விஷயத்திலும் அதே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறார் என்பது இலங்கை கடற்படையினரின் தொடரும் இத்தகைய அட்டூழியங்களால் நிரூபணம் ஆகி வருகிறது என்றே கூறவேண்டும்.
28 மீனவர்களும் எச்சரித்து விடுதலை
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 தமிழக மீனவர்கள் எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 28 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இந்நிலையில், விசாரணைக்குப் பின் அவர்கள் அனைவரையும் இலங்கை கடற்படை எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளது.

ad

ad