புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2012


பிரிட்டனிலிருந்து மேலும் 600 இலங்கையர் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்!
பிரித்தானியாவில் தஞ்சமடைந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 600  இலங்கையரை திருப்பி அனுப்ப  அந்நாட்டு அரசாங்கம்  தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பிரித்தானியாவில் தஞ்சமடைந்திருந்தவர்களே இவ்வாறு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர் என தெரியவந்துள்ளது.
தற்போது இலங்கையில் சமாதான சூழ்நிலை காணப்படுவதனையடுத்தே இவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் இவர்கள் அனைவரையும் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைப் பிரித்தானிய அரசு செய்து வருவதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

ad

ad