புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2012

ஈரான் தாக்கப்பட்டால் அமெரிக்க படைகளும் பேரழிவை சந்திக்கும்ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை மட்டுமல்ல மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகள் மீதும் அந்நாடு தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

லெபனான் நாட்டு தொலைக்காட்சியான அல்- மைதீனுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நிச்சயமாக அமெரிக்க இராணுவ தளங்கள் மீது அந்நாடு தாக்குதல் மேற்கொள்ளும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் அமெரிக்காவுக்கு தொடர்பே இல்லாமல் இருந்தாலும் கூட அமெரிக்கா இராணுவ தளங்களைத் தாக்கும்.
fhnj
குறிப்பாக இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க இராணுவ தளங்களை மட்டுமல்ல மத்திய கிழக்கில் இருக்கும் அனைத்து அமெரிக்க இராணுவ தளங்களையுமே ஈரான் தாக்கும். ஏனெனில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டும்.

ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால் அது மிகப் பெரும் பாதிப்பை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும். தங்களது அணு ஆராய்ச்சி மையங்கள் மீதான தாக்குதலை ஈரான் மன்னித்துவிடாது.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே மோதல் ஏற்படுமேயானால் இஸ்ரேல் முழுவதையுமே தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளை எமது இயக்கம் பயன்படுத்தும். இதற்காக இரசாயான ஆயுதங்களோ அணு ஆயுதங்களோ எங்களுக்குத் தேவையில்லை. எங்களிடம் அணு ஆயுதங்களும் இல்லை. எங்களிடம் இருக்கின்ற ஏவுகணைகளே போதும் என்றார் அவர்.

ad

ad