புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2012


புரளிகளை நம்ப வேண்டாம்: நடிகர் கமல்ஹாசன் அறிக்கை
விஸ்வரூபம் படம் திரைக்கு வருவது தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம்'' என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஷஷஆரோ 3டி தொழில்நுட்பம், ரசிகர்களுக்கு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை மேலும் பல படி நிலைகளுக்கு உயர்த்தி பெரும் கிளர்ச்சியை அளிக்கும். இந்த ஆரோ 3டி தொழில்நுட்பத்தை ஷவிஸ்வரூபம்' திரைப்படம் மூலமாக நம் பார்வையாளர்களுக்கு நாங்கள் கொண்டு வருவதில், பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மற்ற தொழில்நுட்பங்களைப்போல் அல்லாமல், ஆரோ 3டி இயங்குதளத்தின் செயல் உருவாக்கமும், மிக குறைந்த நிறுவுதல் நேரமும் இதன் பெரும் சிறப்பு. என்னுடைய நண்பர் வில்பிரடின் இந்த ஆரோ 3டி தொழில்நுட்பம், இந்திய திரைப்பட ரசிகர்களுக்கும் பயன்படும் வகையில், பல நல்ல திரையரங்குகளும், அதன் நிர்வாகிகளும் வளர்ச்சி மனோபாவத்தோடு இதை எடுத்துச் செல்ல முன்னோக்கி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஷவிஸ்வரூபம்' படத்தின் வெளியீட்டு நாள் பற்றி பல புரளிகள் பரவி வருகின்ற இவ்வேளையில், என்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் இருந்து மட்டுமே இதுகுறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும் என்று உறுதியளிக்கிறேன்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்

ad

ad