புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2012


ஆடையில் தீப்பற்றியதால் பரிதாபகரமாக உயிரிழந்த கர்ப்பிணித் தாய்: மன்னாரில் சம்பவம்
மன்னார், வெள்ளாங்குளம் பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணித்தாய் ஒருவர் ஆடையில் தீப்பற்றியதால் பரிதாபகரமாக இன்று உயிரிழந்துள்ளார்.
மன்னார், வெள்ளாங்குளம் சேவா கிராமத்தில் வசிக்கும் இளம் குடும்பப் பெண்ணான நிசாந்தன் மயூறி (வயது 18) என்ற பெண் அடுப்பை பற்ற வைக்கும் போது தவறுதலாக ஆடையில் தீ பிடித்ததினால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிகாயங்களுக்குள்ளான நிலையில் குறித்த பெண் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்து குறித்த பெண்ணின் தாயாரிடமும் கணவனிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ad

ad