புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2012


இலங்கையில் தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கப்படவேண்டும்!- மத்திய பிரதேஸ் முதலமைச்சர்
இலங்கையில் தமிழர்கள்> சிங்களவர்களுக்கு இணையாக நடத்தப்படவேண்டும் என்பதே தமது எதிர்ப்பார்ப்பாகும் என்று மத்திய பிரதேஸ் முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சௌஹான் வலியுறுத்தியுள்ளார்
இதனை கருத்திற்கொண்டு இலங்கை அரசாங்கம் சரியான கொள்கைகளை வகுத்து அதன்படி செயற்படவேண்டும். இதன்போதே தமிழர்கள் மத்தியில் இலங்கை அரசாங்கம் இடம்பிடிக்கமுடியும். அத்துடன், இரண்டு நாட்டு மக்களிடமும் இருக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் சௌஹான் குறிப்பிட்டுள்ளார்.
சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற குறுகிய நேர கலந்துரையாடலின் போது சௌஹான் இந்த விடயங்களை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கப்படவேண்டும். அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதிப்படுத்த வேண்டும் என்று சௌஹான் இதன்போது கோரியுள்ளார்.

ad

ad