புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2012

பிள்ளையான், பயங்கரவாதம் சம்மந்தமான ஆலோசகரா?: ஐ.தே.க கேள்வி
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக ஜனாதிபதி முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ள அதேவேளை 52 முஸ்லிம்களை படுகொலை செய்த முன்னாள் முதல்வர் பிள்ளையானை தனது
ஆலோசகராகவும் நியமித்துள்ளார்.
 
அப்படியானால் அவர் பயங்கரவாதம் சம்மந்தமான ஆலோசகரா? என ஐக்கிய தேசியக் கட்சியின எம்.பி.யான தயாசிறி ஜயசேகர இன்று சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்றைய அமர்வின் போது இடம்பெற்ற ரணவிரு சேவா அதிகார சபை திருத்தச் சட்டம் மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ad

ad