புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2012


இறுதி ஊர்வலத்திற்கு பின் விஜயராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது


ராஜபக்சே வருகையை கண்டித்து தீக்குளித்து  இறந்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மதியம் போஸ் மைதானத்திற்கு உடல் கொண்டுவரப் பட்டது
.  அதன்பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.  ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.


விடுதலை சிறுத்தைகள் கட்சிதலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்,   தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்தி பேசினர்.

பின்னர் விஜயராஜின் உடல் போஸ் மைதானத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சேலம் லீபாஜாரில் இருக்கும் சுடுகாட்டில் வைத்து இறுதி சடங்கு செய்யப்பட்டது.

ஊர்வலத்தின் வழி நெடுக பல்லாயிரக்கணக்கான பேர் கண்ணீருடன் பங்கேற்றனர்.  இந்த
ஊர்வலத்தில் தமிழீழத்திற்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
விடுதலைப்புலிகள் இயக்ககொடியை விஜயராஜின் உடலில் போர்த்தி எடுத்துச்செல்லப்பட்டது. 
இரவு 7.30 மணிக்கு விஜயராஜின் உடல் எரியூட்டப்பட்டது.


படங்கள் : இளங்கோவன்

ad

ad