புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2012


இறுதிப் போரில் பங்கெடுத்த மற்றுமொரு இராணுவத் தளபதி அவுஸ்திரேலியாவில் மாரடைப்பால் மரணம்
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான இறுதிப் போரில் தீவிரமாகப் பங்கெடுத்த  இலங்கை இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சமந்த சூரியபண்டார அவுஸ்திரேலியாவில் மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.
குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்த 50 வயதான இராணுவ தளபதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார்.
முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேஜர் ஜெனரல் சமந்த சூரிய பண்டார, கொமாண்டோ றெஜிமென்ட்டைச் சேர்ந்தவர்.
இவர் நான்காவது கட்ட ஈழப்போரின் தொடக்கத்தில், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த 53வது டிவிசனின் தளபதியாக இருந்தவர்.
முகமாலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தவர்.
2008 ஏப்ரலில் முகமாலையில் 53வது டிவிசனின் முன்னகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, இவர் அமெரிக்காவில் உள்ள  இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் இவர் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்கா, பாகிஸ்தான், சீனாவில் பயிற்சிகளைப் பெற்ற மேஜர் ஜெனரல் சமந்த சூரியபண்டார, ஒரு பரசூட் மூலம் குதிப்பதில் வல்லவராவார்.
ஜெயசிக்குறு சமரின் போது இவர் பயணம் செய்த உலங்குவானூர்தி புலிகளின் தாக்குதலில் வீழ்ந்தபோது இவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.
ஆட்சிக்கவிழ்ப்பு சதிக் குற்றச்சாட்டை அடுத்து சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது, கட்டயமாக ஓய்வில் அனுப்பப்பட்ட இராணுவத்தைச் சேர்ந்த 10 மேஜர் ஜெனரல்களில் சமந்த சூரியபண்டாரவும் ஒருவராவார்.
இவர் ஒய்வுபெறுவதற்கு 10 ஆண்டுகள் முன்னதாகவே, கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டதுடன், இவரது ஓய்வூதியமும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து மேஜர் ஜெனரல் சமந்த சூரியபண்டார குடும்பத்துடன்  நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad