அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 180 பேர் கடற்படையிரால் மீட்பு! கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைப்பு
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 180 பேர் இன்று சனிக்கிழமை இந்தோனேசிய கடல் எல்லையில் வைத்து அவுஸ்திரேலிய கடற்படை மற்றும் ஏனைய கப்பல்களால் மீட்கப்பட்டனர்
இவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
இந்தநிலையில் குறித்த அகதிகள் எங்கிருந்து வந்தனர் மற்றும் கப்பல் எந்த நாட்டுக்குரியது என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை
இதேவேளை நவுறு தீவுக்கு செல்ல விரும்பாத 18 இலங்கையர் இன்று நாடு திரும்பியதாக அவுஸ்திரேலிய மோர்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது
இந்த சம்பவங்களும் ஒன்று அவுஸ்திரேலிய குடிவரவுக் கொள்கைக்கு வெற்றியாக கருதப்படுவதாக அந்த செய்திதாள் குறிப்பிட்டுள்ளது