புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2012


கிளிநொச்சியில் புலமைப்பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம் - பா.உ.சிறிதரன் வாழ்த்து
கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மூன்று மாணவர்களுக்கும் பா.உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் பாடசாலைக்கும் பெற்றார்களுக்கும் பெருமை சேர்க்கும்படியாக பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
கிளி/மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவி சந்திரகுமார் லக்சிகா, கிளி/திருவையாறு ம.வி மாணவன் பரமானந்தன் சாரலன், கிளி/ம.வி தேவராசா சபில்சன்
ஆகியோர் 177 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களுக்கும் ஏனைய சித்தி எய்திய மாணவர்களுக்கும் மற்றும் திறமையான புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் தன் வாழ்த்துக்களை பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
இம்மாணவர்கள் சாதனையாளர்களே ஏனெனில் இவர்களின் வகுப்புகளும் கொடும் போருக்குள்ளும் அகதி முகாம்களிலுமே கற்றலின்றி கழிந்தது. இத்தனையும் கடந்து கிடைத்ததுதான் இவர்களின் வெற்றி இந்த வெற்றிக்கு துணையான அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலை மாணவி லக்சிகா கிளிநொச்சி ஆனந்தபுரம் மேற்கை சேர்ந்தவர் தந்தை சந்திரகுமார் ஒரு மேசன் தொழிலாளி தாயார் கார்த்திகா வீட்டுப்பணிகளை கவனிக்கின்றார்.வீட்டில் அண்ணனும் அம்மாவும் பாடசாலையில் துஸ்யந்தி ஆசிரியையும் பிரத்தியேகமாக சசிரதன் ஆசிரியரும் கற்பித்து தன்னை இந்நிலைக்கு உயர்த்தியதாக மாணவி லக்சிகா சொல்கிறார்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தை சேர்ந்த சபில்சன் ஜெயந்திநகர் கிளிநொச்சியை சேர்ந்தவர் தந்தை தேவராசா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் பொது முகாமையாளராக கடமையாற்றுகின்றார்.
அம்மா உதய நிர்மலா கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ உதவியானராக பணி செய்கின்றார். வீட்டில் அப்பா தமிழ் கணிதம் போன்ற பாடங்களையும் அம்மா ஆங்கிலத்தையும் கற்றுதருவதாகவும் பாடசாலையில் ஆசிரியை திருமதி கமல்ராஜ் ரேகா மிகுந்த ஆழமாக கற்றுத்தருவதாகவும் பிரத்தியேகமாக ஆசிரியர் சசிரதனின் இடைவிடா முயற்சியே மாவட்டத்தில் முதல்நிலை பெற காரணம் என்கிறார் சபில்சன்.
கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தை சேர்ந்த பரமானந்தம் சாரலன் திருவையாறு மூன்றாம் பகுதியை சேர்ந்தவர்.இவரின் தந்தை பரமானந்தம் ஒரு ஆசிரியர் தாயார் கிரிஜா வீட்டுப்பணிகளுடன் மகனின் கல்வியில் அக்கறையாக இருந்துள்ளார்.
பாடசாலையில் செல்வி.அ.அருள்நந்தினி திருமதி ச.சிவானந்தம் ஆகியோரும் பிரத்தியேகமாக திருமதி.கரோலின் திருமதி.சிவபாக்கியம் ஆகியோரும் எடுத்த
முயற்சியே மாவட்டத்தில் தங்கள் மகன் முதல்நிலை பெற காரணம் என்கின்றனர்.
சாரலனின் தந்தை கருத்து சொல்கையில், தங்கள் வீட்டுக்கு மின்சாரம் தரப்படவில்லை. எம் மகன் பாடசாலையில் நடந்த போட்டியொன்றில் முதலிடம் பெற்றததற்காக Child Fund  நிறுவனம் பரிசாக தந்த சூரிய மின்கலத் தொகுதிக்கு மிகுந்த நன்றியை தெரிவிப்பதாக சொல்கிறார். அதனால் தான் தன் மகன் அதிகமாக படித்தார் எனவும் தெரிவித்திருந்தார்.

ad

ad