புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2012


விடுதலைப் புலிகளின் தடை மீதான தீர்ப்பாய விசாரணையில் வைகோ பங்கேற்பார்!
விடுதலைப் புலிகளின் தடை மீதான சட்டத் தீர்ப்பாயத்தின் விசாரணையில் வைகோ பங்கேற்பார் என்று மதிமுக செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து இன்று அது வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்தத் தடையாணை சட்டவிரோத தடுப்புச் சட்டம் தொடர்பான தீர்ப்பாயத்தில் பொது விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் கருத்தைக் கேட்டறிந்து, பின்னர் தடையாணை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
சட்டவிரோத தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தின் விசாரணை நாளை காலை 10.30 மணிக்கு, சென்னையில் நடைபெறவுள்ளது.
அந்த விசாரணையில் மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்க உள்ளார். என்று கூறப்பட்டுள்ளது.

ad

ad