தீக்குளித்த இடத்திலேயே விஜயராஜின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
’’எப்.ஐ.ஆர் காப்பியை பார்க்க அனுமதிக்க வேண்டும், கைப்பற்றப்பட்ட விஜயராஜ் எழுதிய 36 பக்க கடிதத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும், மாஜிஸ்திரேட்டிடம் அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, ராஜபக்சே ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்.
கடுமையான வாக்குவாதங்களுக்கு பிறகு, எப்.ஐ.ஆர். காப்பியை போலீசார் காட்டினர். கைப்பற்றப்பட்ட விஜயராஜின் 36 பக்க கடிதம் ஒப்படைக்கப்பட்டது. மாஜிஸ்திரேட்டிடம் கொடுக்கப்பட்ட வாக்குமூலம் கொடுக்கப்பட்டது. பிரதமர், சோனியா, ராஜபக்சே மீது வழக்கு பதிவு செய்வது மட்டும் இப்போது முடியாது. அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை போலீசார் விளக்கினர்.
இதையடுத்து உறவினர்களின் ஒப்புதலோடு விஜயராஜின் உடல் போஸ்ட்மார்டம் செய்யப்பட்டது. போஸ்ட்மார்டத்திற்கு பின்னர் விஜயராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விஜயராஜ் தீக்குளித்த சேலம் பழையபேருந்து நிலையத்திலேயே அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.