புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2012


இலங்கைப் படையினருக்கான பயிற்சிகள் நிறுத்தப்படமாட்டாது: இந்தியா
தமிழகத்தின் கட்சிகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தாலும் இலங்கைப் படையினருக்கு பயிற்சியளிப்பதை இந்தியா நிறுத்தப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத் தரப்புகள் பி.ரி.ஐ செய்திசேவையிடம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளன. எனினும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியை மாத்திரம் நேரத்துக்கு தகுந்தாற்போல ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலையில் இலங்கையின் பல்வேறு படைப்பிரிவுகளையும் சேர்ந்த 450 வீரர்கள் இந்தியாவின் பெங்களுர், குன்னூர் மற்றும் பெல்காம் ஆகிய இடங்களில் பயிற்சிகளை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையி;ல் இலங்கைப் படையினருக்கான பயிற்சிகளை உடனடியாக நிறுத்துமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட்ட தமிழக தலைவர்கள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad