புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2012


ஈழத்தில் விரைவில் விடுதலைப் போராட்டம் வெடிக்கும்: கவிஞர் காசியானந்தன்
ஈழத்தில் மிக விரைவில் பெரிய விடுதலைப் போராட்டம் வெடிக்கும் என கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்நாள் நடந்த தமிழர் இயக்கத்தின் கொள்கைப்பரப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஈழ கவிஞர் காசியானந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் பேசியதாவது:
தமிழ் ஈழம் என்பது தமிழர்களின் தாயகம்.
ஈழப் போர் தொடங்கியபோது சென்னை இலங்கை தூதரகம் முன்பு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தவர்களை ஆதரித்துப் பேசினார் மூதறிஞர் ராஜாஜி.
அதன் பின் நடந்த இரண்டு ஈழப் போராட்டத்திலும் நாம் பதினைந்தாயிரம் ஏக்கர் பரப்பு நிலத்தை சிங்களவரிடம் இழந்தோம்.
ஆனால் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் ஆயுதமேந்திய காலங்களில் நாம் கையளவு நிலத்தைக் கூட பறிகொடுக்கவில்லை.
முள்ளிவாய்க்கால் கொடுமையைப் பற்றி இந்திய அரசு சொல்லத் தயங்குகிறது. ஐந்தாயிரம் வீடுகள் தமிழர்களுக்கு கட்டித்தரப்பட்டதாக அங்கே உள்ளவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் அங்கே போய் வந்தவர்களோ 500 வீடுகள் தான் கட்டப்பட்டுள்ளன என்கின்றனர்.
தாய் தமிழச்சிகள் சொல்ல முடியாத பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
ஈழத்தில் பெரிய விடுதலைப் போர் வெடிக்கும் என்றபடி தனது உணர்ச்சிபூர்வமான உரையை முடிந்தார் கவிஞர் காசியானந்தன்.

ad

ad