புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2012


தமிழக சட்டசபை வரும் 10ம் தேதி கூடுகிறது! சபாநாயகர் பதவிக்கு தனபால் நிறுத்தப்படுவார் என ஜெ. அறிவிப்பு!
தமிழக சட்டசபையில் வைர விழா வரும் 29ஆம் தேதி நடைபெறும் என்றும், சட்டசபையின் கூட்டத்தொடர் 30ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சபாநாயகராக இருந்த டி.ஜெயக்குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து தமிழக அரசு புதிய சபாநாயகரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டது. சபாநாயகர் பதவி தேர்தலில் ப.தனபால் நிறுத்தப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதனையொட்டி தமிழக சட்டசபை வரும் 10ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார்

ad

ad