13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அணி திரளும் அரச கட்சிகள்
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்வதற்கு அரசியல் அங்கம் வகிக்கும் கட்சிகள் அணி திரளுகின்றன. தேசிய சுதந்திர முன்னணி இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கி களத்தில் இறங்கியுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை ரத்து செய்யும் ஆலோசனையை முன்னெடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் தினேஸ் குணவர்தன உறுதிப்படத் தெரிவித்தார்.
தேசிய சுதந்திரம் முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதுடன் இதற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் இதே கருத்தைக்கொண்டுள்ள ஏனைய கட்சிகள் அமைப்புக்களை ஒன்றிணைத்துக் கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை ரத்து செய்யும் ஆலோசனையை முன்னெடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் தினேஸ் குணவர்தன உறுதிப்படத் தெரிவித்தார்.
தேசிய சுதந்திரம் முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதுடன் இதற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் இதே கருத்தைக்கொண்டுள்ள ஏனைய கட்சிகள் அமைப்புக்களை ஒன்றிணைத்துக் கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.