புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2012

மஹேல ஜயவர்தன மாலிங்கவுக்கு ஓய்வு
நியூசிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு இருபதுக்கு 20, ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
 


இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி கண்டி பல்லேகளேயில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காயம் காரணமாக அஜன்த மெண்டிஸ் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

இப்போட்டியில் ஏஞ்சலோ மெத்தியூஸ் தலைமை தாங்கவுள்ளதோடு அணியின் உபதலைவராக நுவான் குலசேகர செயற்பட உள்ளார்.

நியூசிலாந்துடனான இருபதுக்கு 20 போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் விபரம் வருமாறு,

ஏஞ்சலோ மெத்தியூஸ், நுவான்குலசேகர, டில்சான் முனாவீர, டில்சான்;, குமார் சங்கக்கார, தினே~; சந்திமால், ஜீவன் மெண்டிஸ், லஹிரு திரிமனே, திசர பெரேரா, சமிந்த ஹேரங், அக்கில தனஞ்ஜெய, சச்சித்திர சேனாநாயக்க, உப்புல் தரங்க

ad

ad