ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு சபாநாயகரிடம் விஜயகாந்த் கடிதம்!
ஜெயலலிதாவை சந்திக்க, விஜயகாந்த் மற்றும் 4 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். அந்தக் கடிதத்தில், தங்களின் தொகுதி பிரச்சனை குறித்து பேச முதல்
அமைச்சர் ஜெயலலிதா நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஜெயலலிதாவை சந்திக்க, விஜயகாந்த் மற்றும் 4 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். அந்தக் கடிதத்தில், தங்களின் தொகுதி பிரச்சனை குறித்து பேச முதல்
அமைச்சர் ஜெயலலிதா நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சட்டமன்றத்திற்கு வெளியே (29.10.2012) செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக கொறடா சந்திரகுமார்,
தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சேந்தமங்களம் தொகுதி எம்எல்ஏ சாந்தி, திருவரம்பூர் தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார், மயிலாடுதுறை தொகுதி எம்எல்ஏ அருட்செல்வன், செங்கல்பட்டு எம்எல்ஏ அனகை முருகேசன் உட்பட 5 பேர் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும். தொகுதி சம்மந்தப்பட்ட பிரச்சனை தொடர்பாக அவரிடம் பேச வேண்டும் என்பதற்காக சபாநாயகரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருக்கிறோம். சபாநாயகரும் ஆவண செய்வதாக சொல்லியிருக்கிறார். அவர் அனுமதி எப்போது அளிக்கப்போகிறார் என விஜயகாந்த் உள்ளிட்ட 5 பேரும் காத்திருக்கின்றனர் என்றார்.