புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2012


பெட்ரோல் குண்டு வீசியதில் 5 பேர் மரணம்? : 
மதுரையில் பெரும் பதட்டம்

தேவர் ஜெயந்தி தொடர்பாக பரமக்குடியில் நேற்று மூன்று பேர் கொல்லப்பட்டனர். 
இதையடுத்து  தேவர் ஜெயந்திக்கு சென்றுவிட்டு, நேற்று இரவு மதுரை திரும்பிக்கொண்டிருந்த வாகனத்தை மறித்தனர் சிலர்.   மதுரை சிந்தாமணி அருகில் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

குண்டுவீச்சில் காயமடந்த 20 பேரையும் மதுரை அரசு மருத்துவமனின் தீவிர  சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  இதில் 5 பேருக்கு கவலைக்கிடமான 

நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று காலைதீவிர சிகிச்சை  பிரிவில் இருந்த 5 பேருமே இறந்துப்போனார்கள் என்று தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் காவல்துறையோ, மருத்துவமனை நிர்வாகிகளோ முறையாக அறிவிக்கவில்லை.

இவர்கள் இறந்து போனதை வெளியே சொன்னால் கலவரம் வெடிக்கும் என்பதால் போலீஸ்,  மருத்துவமனை மவுனமாக இருக்கிறது என்று இறந்துபோனவர்களின் உறவினர்கள் மற்றும் சாதி பிரிவினர் மருத்துவமனை முன்பு குவிந்ததால்  மதுரையில் பதட்டம் நிலவுகிறது.

ad

ad