புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2012

இலங்கையிலிருந்து செக்குடியரசிற்கு இரண்டு யானைக் குட்டிகள்
இலங்கையிலிருந்து செக்குடியரசிற்கு இரண்டு யானைக் குட்டிகள் இன்று காலை 6.15 மணியளவில் அனுப்பிவைக்கப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.


பின்னவல யானைகள் சரணாயத்தைச் சேர்ந்த யானைக் குட்டிகள் இரண்டே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றின் மூலமே இவை அனுப்பிவைக்கப்பட்டதாகவும் இக்குட்டிகளின் வயது 7 மற்றும் 8 எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

யானைக்குட்டிகளுக்கு பதிலாக இரண்டு நீர்யானைகள் மற்றும் கொமடோ டிராகன்கள் செக்குடியரசிலிருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தகது.

ad

ad