இலங்கையிலிருந்து செக்குடியரசிற்கு இரண்டு யானைக் குட்டிகள்
இலங்கையிலிருந்து செக்குடியரசிற்கு இரண்டு யானைக் குட்டிகள் இன்று காலை 6.15 மணியளவில் அனுப்பிவைக்கப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
பின்னவல யானைகள் சரணாயத்தைச் சேர்ந்த யானைக் குட்டிகள் இரண்டே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றின் மூலமே இவை அனுப்பிவைக்கப்பட்டதாகவும் இக்குட்டிகளின் வயது 7 மற்றும் 8 எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
யானைக்குட்டிகளுக்கு பதிலாக இரண்டு நீர்யானைகள் மற்றும் கொமடோ டிராகன்கள் செக்குடியரசிலிருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தகது.
இலங்கையிலிருந்து செக்குடியரசிற்கு இரண்டு யானைக் குட்டிகள் இன்று காலை 6.15 மணியளவில் அனுப்பிவைக்கப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
பின்னவல யானைகள் சரணாயத்தைச் சேர்ந்த யானைக் குட்டிகள் இரண்டே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றின் மூலமே இவை அனுப்பிவைக்கப்பட்டதாகவும் இக்குட்டிகளின் வயது 7 மற்றும் 8 எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
யானைக்குட்டிகளுக்கு பதிலாக இரண்டு நீர்யானைகள் மற்றும் கொமடோ டிராகன்கள் செக்குடியரசிலிருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தகது.