புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2012


99 நாள் போராட்டம், 100 வது நாளில் நிறைவு! பல்கலை. விரிவுரையாளர் சங்கத்தின் பொது செயலாளர் தெரிவிப்பு
சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி நாளை முதல் விரிவுரையாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என அவர் மதுஜீத் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தமது 99 நாள் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளனர். சங்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜீத் இதனை தெரிவித்தார்.
இந்த நிலையில், அடுத்த வாரம் முதல் உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் விரிவுரையாளர்கள் பங்குகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் தற்போது தமக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உறுதிமொழிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் பாரிய போராட்டம் ஒன்றுக்கு செல்வதை தவிர்க்க முடியாது என்றும் டெரன்ஸ் மதுஜீத்; எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், பொருளாதார அமைச்சில் இன்று பிற்பகல் 2 :00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பங்குகொள்ளவில்லை. 

ad

ad