புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2012


நடிகர் விஜய்யை முதல்வராக்குவது எஸ்.ஏ.சி.யின் கனவு! போட்டு தாக்குகிறார் கே.ஆர்.!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு அணியாகவும், கே.ஆர். ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் வருவதும், போலீசாரிடம் புகார் அளிப்பது, கோர்ட்டு வரை சென்று அக்கப்போர் செய்வது வாடிக்கை

யான ஒன்று.

இந்த நிலையில் சென்னையில் இன்று (25.10.2012) செய்தியாளர்களை சந்தித்த கே.ஆர்,
எஸ்.ஏ.சி தனது மகன் நடிகர் விஜய்யை முதல் அமைச்சர் ஆக்க வேண்டும் என்ற கனவில் சுற்றுகிறார். தனது மகனை முதல் அமைச்சராக்கிவிட்டு, அவருக்கு உதவியாளராக இருக்கவே கனவு காணுகிறார். அவருடன் தாணுவும் ஒட்டிக்கொண்டுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் மீதும், சங்கத்தின் செயல்பாடுகள் மீதும் எஸ்.ஏ.சி;ச்எ அக்கறை இல்லை. எனது தலைமையிலான தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம் கோர்ட் அனுமதியுடன் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்றார்.

ad

ad