புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012


இணையதளத்தில் அவதூறு பரப்பியதாக புகார்! கைது செய்யப்பட்டோருடன் சமரசம் செய்ய பாடகி சின்மயி மறுப்பு!
இணையதளத்தில் அவதூறு பரப்பிய புகாரில் கைதாகி சிறையில் உள்ளோருடன் சமரசம் செய்துகொள்ள பின்னணி பாடகி சின்மயி மறுத்துவிட்டார். பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துக்கள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், கல்லூரி துணை பேராசிரியர் சரணவன பெருமாள் மற்றும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ராதாமணாளன் என்பவரையும் கைது செய்தனர். 

சரவணபெருமாள் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராதாமணாளன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு, பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சிலரை இந்த புகாரில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்கள், பாடகி சினிமயிடன் சமரசம் செய்து கொள்வதற்காக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமரசத்தை ஏற்க மறுத்த சின்மயி, நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காண விரும்புவதாக கூறிவிட்டு வெளியேறினார்.

ad

ad