புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2012

தந்தை, தாய் மற்றும் மகனுக்கு மரணத் தண்டனை
புஸ்லாவ, ரம்பொடை பெரட்டாசி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை ஆயுதங்களினால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை தாய் மற்றும் மகனுக்கு கண்டி மேல் நீதிமன்றத்தினால் இன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத காலப்பகுதியில் 54 வயதுடைய செனரத் பண்டா என்பவர் ஆயுதங்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புபட்ட பெரட்டாசி பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் இன்று குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கண்டி மேல் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது மாரிமுத்து கோவிந்தசாமி (54வயது), மனைவி இந்திராணி மற்றும் இவர்களின் மகனான கோவிந்தசாமி ஆகியோருக்கு மரதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ad

ad