புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012

கீழ்வேளூர் அருகே ஓட, ஓட விரட்டி அ.தி.மு.க. பிரமுகர் படுகொலை: 4 பேர் கும்பல் ஆத்திரம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள அகர கடம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சரவணக்குமார் (வயது 29). இவர் கீழ்வேளூர்
ஒன்றிய அ.தி.மு.க. இளைஞரணி இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும் அகர கடம்பனூர் பஞ்சாயத்து கவுன்சிலராகவும் இருந்து வந்தார். 

இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் கீழ்வேளூர் கடைவீதியில் உள்ள வங்கிக்கு சரவணக்குமார் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வங்கியைவிட்டு வெளியே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களுடன் விரட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணக்குமார் கும்பலிடம் இருந்த தப்பிக்க ஓடினார். 

இருப்பினும் கும்பல் சுற்றி வளைத்து சரவணக்குமாரை அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அதன்பின்னர் கொலை கார கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். 

பட்ட பகலில் கடைவீதியில் அ.தி.மு.க. பிரமுகர் கொலையுண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை பற்றி தகவல் கிடைத்ததும் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணக்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். 

இதற்கிடையே சரவணக்குமாரை வெட்டிக்கொன்ற கும்பலை கைது செய்யக்கோரி அப்பகுதி அ.தி.மு.க.வினர் கீழ்வேளூர் கடைவீதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து வந்து  பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். 

கொலையுண்ட சரவணக்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சரவணக்குமாரை கொன்ற மர்ம கும்பல் யார்? எதற்காக அவரை வெட்டி கொலை செய்தார்கள்ப என்று கீழ்வேளூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ad

ad