புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2012


பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியை பாராட்டுகிறார் கருணாநிதி
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியை பிரிட்டனில் அமைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கான புதிய கட்சி முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சி தருகிறது. இவ்வாறு தி.மு.க தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிர் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான 'கன்சர்வேடிவ்' கட்சி, தனது கட்சிக்கான உப கட்சியாக பிரி்த்தானியத் தமிழர்களைக் கொண்டு 'பிரிட்டிஷ் தமிழர்களின் கன்சர்வேடிவ்' கட்சி என்ற அமைப்பினை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது என்ற செய்தி, உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்களுக்கு பெருமை அளிக்கின்ற செய்தியாகும்.
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கட்சியில் பிரித்தானிய தமிழர்கள் மட்டுமல்லாமல், இங்கிலாந்தில் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த கட்சியினர் இலங்கைத் தமிழர்கள் மீது கொண்டுள்ள அக்கறை பாராட்டுதற்குரியது என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் தமிழக முதல்வராக இருந்த போதே இறுதிப்போரில் ஈழத்தமிழர்கள் எண்ணுக்கணக்கின்றி கொன்று குவிக்கப்பட்டனர்.
அப்போது அதிகாரம் மிக்க தலைவராக இருந்த இவர் ஈழ மக்களுக்காக எதுவுமே செய்யாது இப்போது சுடலைஞானம் பேசுகிறார் என் தமிழகக் கட்சிகள் விமர்சித்துள்ளன.

ad

ad