புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2012

அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா-பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டனில்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் : அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக்கை எதிர்கொண்டார். துவக்க்ததில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா, 11-7 முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர்  ரட்சனோக் ஆக்ரோஷமாக ஆடி புள்ளிகளை பெற்றார்.
ஒருகட்டத்தில் 20-20 என சமநிலையில் இருந்ததால் ஆட்டம் விறுவிறுப்பானது. இருப்பினும் தனது அனுபவ ஆட்டத்திறனால் சாய்னா அந்த செட்டை 22-20 என்ற கணக்கில் வென்றார். இதேபோல் 2-வது செட்டையும் சாய்னா போராடி 22-20 என கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
உலகத் தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள சாய்னா, இன்று நடைபெறும் அரையிறுதியில் ஜெர்மனி வீராங்கனை ஜூலியானே செங்க் என்பவருடன் மோதுகிறார். கடந்த வாரம் டென்மார்க் ஓபன் பட்டத்தை கைப்பற்றிய சாய்னா, பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் பெறுவார் என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ad

ad