புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012




யாழ்ப்பாணத்தில் பருவமடையாத சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை, மாலியன்பாடு பகுதியில் பருவமடையாத சிறுமி ஒருவரை 25 வயது இளைஞர் ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வடமராட்சிப் பகுதியில் 9 வயது நிரம்பிய கடைக்குச் சென்ற சிறுமி மீது துஸ்பிரயோகத்தில் ஈடுபட முனைந்த 22 வயது கடை ஊழியர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.
நெல்லியடிப் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறிப்பிட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடந்த 9 ம் திகதி இடம் பெற்றதாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெவித்துள்ளார்.
சந்தேக நபர் பொலிசாரினால் பருத்திதுறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

ad

ad