புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2012




இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பேசினர்.
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் 7 எம்.பி.க்கள், சம்பந்தன் தலை‌மையில் இந்தியா சென்றுள்ளனர். இவர்கள் இன்று பிற்பகல் பிரதமர் மன்மோகன் சிங்கை டில்லியில் சந்தித்து பேசினர்.

அப்போது, இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போருக்கு பின்னர் உள்நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீள்குடியேற்றம், மறுவாழ்வு மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசினர்.
முன்னதாக இவர்கள் ‌வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ad

ad