புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2012


முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள், இராணுவத்திற்கு எதிராக சாட்சிகளை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் பிரவேசித்த சில அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டார்கள் இவ்வாறு இராணுவத்திற்கு எதிராக சாட்சியங்களை திரட்ட முயற்சித்து வருகின்றனர்.
இறுதிக் கட்ட போரின் போது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கும் நோக்கில் இவ்வாறு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் பல பகுதிகளை தோண்டி வருவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் பின்னணியில் நோர்வே புலித் தலைவர் நெடியவன் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அரச சார்பற்ற நிறுவனத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் இணைந்து கொண்டுள்ளனர்.
படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவன உறுப்பினர்கள் முள்ளிவாய்க்கல் மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளை தோண்டி வருவதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad