புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2012


மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் மகன் விபத்தில் பலி: இருவர் படுகாயம்
மன்னார், தலைமன்னார் பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் என்பவர் உயிரிழந்ததோடு இளைஞனொருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்த இளைஞன் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் மகன் வெக்ஸ்மன் லெம்பேட் (வயது-20) என தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலும் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.
இன்று மதியம் முச்சக்கர வண்டி ஒன்றில் குறித்த மூன்று இளைஞர்களும் மன்னாரில் இருந்து தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு சென்று விட்டு, மன்னாரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, பேசாலை நடுக்குடா வீதியில் முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் போது படுகாயமடைந்த மூன்று இளைஞர்களும் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
படுகாயமடைந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் மகனான வெக்ஸ்மன் லெம்பட் (வயது-20) என்பவருக்கு அதி தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
ஏனைய இரண்டு இளைஞர்களும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த தலைமன்னார் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

ad

ad