புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2012


அன்பான தமிழ் மக்களே!  :
 கனடியத் தமிழர் பேரவையின் அவசர அறிவிப்பு

 தமிழர்கள் எதிர்ப்பு மற்றும் புயல் காரணமாக, இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கனடாவில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பாளர் தருமி, நக்கீரன் இணையதளத்தை தொடர்புகொண்டு,  ‘’நிகழ்ச்சி ரத்து ஆகவில்லை.  நிகழ்ச்சியில் பங்கேற்போரில் 60 சதவிகிதம் பேர் கனடா வந்துவிட்டனர்.

  இளையராஜா மட்டும் வரவில்லை.  அவரும் வருவதற்கு தயார் நிலையில் உள்ளார்.  வரும் நவம்பர் 3ம் தேதி நிகழ்ச்சி நடைபெறப்போவது உறுதி.  இதில் எந்த மாற்றமும் இல்லை.  அமெரிக்க சாண்டிபுயலால் கனடாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை’’ என்று கூறினார்.

அவர் மேலும்,  நிகழ்ச்சி நடப்பதை கனடா மக்கள் வரவேற்கிறார்கள்.  எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சிலர்தான் அரசியல் நடத்துகிறார்கள் என்று ஆவேசமாக கூறினார்.

ad

ad